புலிகளின் எரிபொருள் கிடங்கில் விமானப்படை தாக்குதல்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான எரிபொருள் கிடங்கை இலங்கை விமானப்படைவீரர்கள் தாக்குதல் மூலம் தகர்த்ததாக இலங்கை கூறியுள்ளது.
வடக்கு யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின்நிலைகள் மேல் தாக்குதல் நடத்தினர். சனிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில்,விடுதலைப் புலிகளின் எரி பொருள் கிடங்கு ஒன்று தாக்கப்பட்டுசேதப்படுத்தப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானப்படை அதிகாரி ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நகருக்குஅருகிலுள்ள அரியாலியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கைவிமானப்படை தாக்குதல் நடத்திய போது மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டது.
விமான பைலட்டுகள், குண்டுகள் போட்டவுடன் மிகப் பெரிய தீப்பிழம்புவருவதையும் கண்டனர் என்றார்.
விமானப்படைத் தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக வந்ததகவலுக்குப் பிறகு 3 நாட்கள் இடைவெளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும்,புலிகள் தாக்குதலுக்கு பயந்து 7 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தயாழ்ப்பாணம் விமான சர்வீஸ் துவங்கிய அடுத்த நாள் இது நடந்துள்ளதும்குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications