கிராம பூசாரிகள் மாநாட்டில் ஜெயேந்திரர் பங்கேற்பு
ராமேஸ்வரம்:
நமது பண்பாட்டை காக்கும் பாதுகாவலர்களாக கோவில் பூசாரிகள் செயல்பட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்கூறினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைத்துள்ள கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் 15 நாள் ஆலய வழிபாட்டு முறை பயிற்சி முகாம் ராமேஸ்வரம் கோசாமிமடத்தில் நடந்தது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமை துவக்கி வைத்தார். பின்னர் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டகிராம கோவில் பூசாரிகள் மாநாட்டில் ஜெயேந்திரர் பேசினார்.
அவர் கூறுகையில், கிராமங்களில் நமது பண்பாட்டைக் காக்கும் பாதுகாவலர்களாக பூசாரிகள் செயல்பட வேண்டும். பூசாரிகள் நலன் காப்பதற்காககிராமக் கோவில் பூசாரிகள் பேரவை அமைப்பை நிறுவி இயக்கரீதியாக அதை பலப்படுத்தியிருப்பதற்காக விஷ்வ இந்து பரிஷத்தை பாராட்டுகிறேன்.
முதிய பூசாரிகள் 1,500 பேருக்கு மாதம் ரூ.500 ஓய்வூதியம் தர அரசு ஆணை பிறப்பிக்குமாறு செய்த பேரவையின் முயற்சிக்கு நன்றி என்றார் ஜெயேந்திரர்.