ஸ்டார் ஹோட்டலாகும் சுற்றுலா ஹோட்டல்கள்
நாகர்கோவில்:
மதுரை, கொடைக்கானல், ஊட்டி, கன்னியாகுமரி, மாமல்லபுரம் ஆகிய ஊர்களில் இருக்கும் சுற்றுலாத்துறை ஓட்டல்கள் 2 நட்சத்திர அந்தஸ்துக்குஉயர்த்தப்பட இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கன்னியாகுமரி கடற்கரை அருகில் இயற்கை அழகை ரசிக்கும் விதத்தில் ரூ 50 லட்சம் செலவில் பிளாடஃபாரம் கட்டபட்டு வருகிறது. சூரிய அஸ்தமனம்உதயத்தை ரசிக்கும் விதத்தில் ரூ 10 லட்சம் செலவில் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில ரூ 2.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மையத்தை தமிழக முதல்வர் அடுத்த மாதம் திறந்து வைக்கிறார்.
மதுரை, கொடைக்கானல், ஊட்டி, மாமல்லபுரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள சுற்றுலாத்துறை ஓட்டல்கள் அடுத்த மாதம் முதல் இரண்டுநட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்ப்பட உள்ளது என கூறினார்.












Click it and Unblock the Notifications