ராஜ்குமார் விடுதலை: விவரம் கேட்கிறார் வக்கீல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, தமிழக கர்நாடக அரசுகளுக்கும், வீரப்பனுக்கும் ஏதாவது ரகசிய ஒப்பந்தம்ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மனுசெய்துள்ளார்.

கடந்த ஜூலை 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டார். 108 நாட்களுக்குப்பின் நடிகர் ராஜ்குமாரை வீரப்பன்விடுவித்துள்ளார். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் வதேரா, பொதுநலன் கருதி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், வீரப்பன், 10 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார். அவற்றில் மைசூர் ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ள 56 தடா கைதிகள் விடுதலை மற்றும் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை ஆகியவை முக்கியநிபந்தனைகளாகும்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக, கர்நாடக அரசுகள் ஒப்புக் கொண்ட போதிலும், சுப்ரீம் கோர்ட் தடா கைதிகள் விடுதலையை நிறுத்திவைத்தது. ஏனெனில் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ. ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம், தடா கைதிகள் விடுதலையைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தடா கைதிகள் விடுதலைக்குத் தடை விதித்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வீரப்பன், நடிகர்ராஜ்குமாரை விடுவித்துள்ளார். தன்னுடைய நிபந்தனைகள் எதுவும் நிறைவேறாத நிலையில் வீரப்பன் எப்படி ராஜ்குமாரை விடுவித்திருக்க முடியும்?

இதனால் தமிழக, கர்நாடக அரசுகளுக்கும் வீரப்பனுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பேரம் அல்லது ரகசிய ஒப்பந்தம் ஏதாவதுஏற்பட்டிருக்கலாம். இது உண்மையாக இருக்கக் கூடும் என்று நான் நம்புகிறேன். இல்லாவிடில் வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை விடுவித்திருக்க முடியாது.

ராஜ்குமார் விடுதலையில், தூதர் நெடுமாறன் மூலம், தமிழக, கர்நாடக அரசுகளுக்கும், வீரப்பனுக்கும் ஏதாவது உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம்.உடன்பாடு ஏற்பட்டாலன்றி ராஜ்குமார் விடுதலையடைந்திருக்க மாட்டார்.

ராஜ்குமார் விடுதலையில் ஏதாவது பேரம் நடந்திருக்கிறதா என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 9ன் படிராஜ்குமார் விடுதலையடைந்தது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வது அடிப்படை உரிமையாகும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் வதேரா.

மேலும் இந்த மனுவை, தமிழக, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சரவை செயலாளர், இரு மாநில கவர்னர்கள், ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+