For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு உயர புத்தகம் படியுங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளில் புத்தகம் படிக்கும் பழக்கம், திட்டமிட்டுதடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இப்பழக்கத்தை திட்டமிட்டு அழிக்க முயற்சிகள்நடந்து வருகின்றன என சாகித்ய அகெடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன்கூறினார்.

திருப்பூர் தமிழ்ச் சங்கம் சார்பாக இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்பொன்னீலன் பேசியதாவது:

வளர்ந்து வரும் நாடுகளில் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் இங்கு அறிவு வளர்ச்சி உயர்ந்து வருகிறது. இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை திட்டமிட்டு அழித்து வருகின்றனர்.

எந்த நாடு புத்தகங்களை மதிக்கிறதோ, அந்த நாடுதான் தலைமை வகிக்கும் தகுதியைஉடையது என்ற நிலை இதனால் மாறி வருகிறது. சிந்தனையை வளர்க்கவும், சமூகம்மேம்படவும் புத்தகம் படிக்கும் பழக்கம் தேவை.

பிரான்ஸ், இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில், புத்தகம் படிக்கும் பழக்கம்அதிகரித்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வாழ்ந்த முற்காலத்தில்,படித்தவர்களை மதிக்கும் பண்பு தமிழர்களிடையே இருந்தது. இப்போதும் அந்தப்பண்பு தொடர வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X