மேட்ச் பிக்ஸிங் புகார்: மார்க் வாக்கை விட்டுவிடுங்கள் .. கூறுகிறார் பார்டர்
பிரிஸ்பேன்:
மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக்கை தொடர்ந்துகேள்விகள் கேட்டு துன்புறுத்த வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்கூறியுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங்கில் தொடர்புடைய கிரிக்கெட் வீரர்கள் குறித்த பட்டியலைஇந்தியாவின் புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ. சமீபத்தில் தனது அறிக்கையில்வெளியிட்டது.அதில் மார்க் வாக்கின் பெயரும் அடங்கியிருந்தது.
இந்திய புக்கி முகஷ்ே குப்தா அளித்திருந்த வாக்குமூலத்தில், மார்க் வாக் தன்னிடம்20,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றார் என்று சி.பி.ஐ. விசாரணையின்போதுகூறியிருந்தார்.
இதுகுறித்து பார்டர் கருத்துத் தெரிவிக்கையில், இந்திய புக்கியிடமிருந்து பணம்பெற்றுக் கொண்டதாக கூறப்படும் புகாரை மார்க் வாக் ஏற்கனவே மறுத்துள்ளார்.அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போதைய புகார்களால் மார்க் வாக் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். இது அவரதுவிளையாட்டைப் பாதிக்கும். எனவே அவரை பத்திரிகைகள் உள்ளிட்ட அனைவரும்அப்படியே விட்டு விட வேண்டும். அப்போதுதான் அவர் தனது உண்மையானஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
மார்க் வாக் தனது நிலையை தெளிவுபடுத்துகிறார். ஆனால் புக்கியோ ஒன்றைக்கூறுகிறார். நாமோ, சட்டவிரோதமான புக்கியின் வாதத்தை மட்டுமே ஏற்கிறோம். இதுவிசித்திரமாக உள்ளது என்றார் பார்டர்.