தப்பினார் கைதி.. சஸ்பெண்ட் ஆனார் எஸ்.ஐ.
கோவை:
போலி மதுக் கடத்தல் விவகாரத்தில் எம்.எல்.ஏ.,வின் அண்ணனைத் தப்பவிட்டபோலீஸ் சப் இன்ஸ்பெக்டரை (எஸ். ஐ.) போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பல்லடம் அருகே போலி மதுக்கடத்தலில் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வேனிலிருந்து தப்பி ஓடியடிரைவர் பழனிச்சாமி கிணற்றில் விழுந்து பலியானர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகோயில் எம்.எல்.ஏ.,வான சாமிநாதனின்அண்ணன் குப்புசாமியைப் போலீசார் கைதுசெய்தனர். அவருக்குச் சொந்தமானதிருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு லட்சம் மதிப்புள்ள போலிமது மற்றும் லேபிள்களைப் போலீசார் கைப்பற்றினர்.
போலி மதுக் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட குப்புசாமியை, எஸ். ஐபாண்டியராஜன் மற்றும் போலீசார் காங்கேயம் மது விலக்குப் பிரிவிற்கு அழைத்துச்சென்றனர். அப்போது குப்புசாமி தப்பி ஓடினார்.
இதையடுத்து குப்புசாமியைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. கோவையில்தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரைப் போலீசார் கைது செய்தனர்.
குப்புசாமி தப்பிச் செல்ல கவனக்குறைவாகச் செயல்பட்ட எஸ். ஐ., பாண்டியராஜனைஎஸ்.பி அசோக்குமார் தாஸ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications