இந்திய பயணிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை நீக்குகிறது மலேசியா
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை நீக்கமலேசிய சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் சுற்றுப்பயணம் முடித்து விட்டு கோலாலம்பூர் திரும்பியமலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ததுக் அப்துல் காதிர் ஷ்ே பாத்சிர்இதுகுறித்துக் கூறியதாவது:
மலேசியாவுக்கு உண்மையிலேயே சுற்றுலா பயணிகளாக வருவோருக்க விசாகட்டுப்பாடுகளை நீக்க மலேசிய அரசு திட்டமிட்டு வருகிறது. சுவிட்சர்லாந்து,சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் விசா வழங்குவது தொடர்பாகமேற்கொள்ளப்படும் பணிகளைத் தீவிரமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறார்கள். ஆனால் விசாகிடைப்பதில் பல சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே அதை சீர்செய்ய முடிவு செய்துள்ளோம்.
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் விசா கிடைக்க உதவும்படி மலேசியசுற்றுலாத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மலேசிய விசா வழங்கும் முறை, இந்தியசுற்றுலா பயணிகளுக்கு சிரமமாக இருப்பதை அறிவோம்.
மலேசியாவுக்கு அதிக இந்திய பயணிகளை வரவேற்பதில், நாங்கள் மகிழ்கிறோம்.இந்தியா, மலேசியாவுக்கு மிகவும் முக்கியமானது. காரணம், இந்திய சுற்றுலாத்துறையின் மகத்தான மார்க்கெட் மதிப்பு.
மலேசியாவிலிருந்து, இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை நகரங்களுக்குகூடுதலாக 9 விமானங்கள் விடப்படும். இவை வாரத்திற்கு ஒருமுறை இந்தநகரங்களுக்கு இயக்கப்படும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications