For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 பேர் கொலையால் ஜம்மூவில் பதட்டம்: ஊரடங்கு அமல்

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ:

ஜம்மு அருகே கிஸ்த்வாரில் 5 இந்துக்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டதையடுத்து அங்கு தொடர்ந்து பதட்டம்நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிளைத் தேடும் பணியில் போலீஸார்ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே சில பகுதிகளில் கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.

வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜம்முவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிஸ்த்வார் பகுதியில் பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டருந்த 5 கூலித் தொழிலாளர்களும், ஒரு பஸ் கண்டக்டரும் கடத்திச் செல்லப்பட்டனர்.அவர்களில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் தப்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்கள். ரம்ஜானை ஒட்டி காஷ்மீரில் இந்திய அரசு போர் நிறுத்தத்தைஅறிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்துக்கு பொது மக்களிடையே வரவேற்பு உள்ளது. இதனால் பதற்றம்அடைந்துள்ள பாகிஸ்தான் தனது புத்தியைக் காட்டியுள்ளது. அங்கு தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டுஅப்பாவிகளைக் கொல்லச் செய்துள்ளது.

இவர்களைக் கொன்ற தீவிரவாதிகளை ராணுவத்தினர் தேடி வருகின்றனர். போர் நிறுத்தத்தை எப்படியாவதுதோல்வியடையச் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. ஆனால், என்ன நடந்தாலும் சரி போர்நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம் என பிரதமர் வாஜ்பாய் கூறிவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X