For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாதா சோட்டா ராஜன் தாய்லாந்து மருத்துவமனையிலிருந்து தப்பினான்

By Staff
Google Oneindia Tamil News

பாங்காக்:

தாய்லாந்து மருத்துவ மனையிலிருந்து சோட்டா ராஜன் தப்பித்தார். படுக்கை விரிப்புக்களை கயிறு போல் கட்டி 4 வது மாடியிலிருந்து குதித்துத் தப்பித்து விட்டார்அவர்.

இந்தியாவில் பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் சோட்டா ராஜன். இவர் தாய்லாந்து நாட்டுக்குத் தப்பியோடி அங்கு பதுங்கியிருந்தார்.

அப்போது, இவரது கோஷ்டிக்கும், மும்பை தொடர்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட தாவூத் இப்ராஹிம் கோஷ்டிக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் சோட்டா ராஜன் காயமடைந்தார்.

இதையடுத்து, அவர் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சமிட்டிவேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சோட்டாராஜனை இந்தியாவுக்குக் கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் அவரை தாய்லாந்து போலீஸார் கைது செய்தனர். போலீஸ் காவலுடன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில்வெள்ளிக்கிழமை காலை சோட்டா ராஜன் தப்பித்து விட்டார். மருத்துவமனையில் தான் தங்கியிருந்த 4 வது மாடியிலிருந்து குதித்துத் தப்பித்து விட்டார்.

இந்தத் தகவலை தாய்லாந்து போலீஸ் அதிகாரி வொராசார்ட் தெரிவித்தார்.

தனக்கு அளிக்கப்பட்டிருந்த பலத்த காவலையும் மீறி சோட்டா ராஜன் தப்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சோட்டா ராஜன் அறைக்குள்காவலுக்கு இருந்த 2 அதிகாரிகளும் போதை மருந்து சாப்பிட்டு உள்ளனர்.

எனவே போதை மருந்தைக் கொடுத்து ஏமாற்றி சோட்டா ராஜன் தப்பித்து இருக்கலாம். அல்லது அங்குள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துத்தப்பித்து இருக்கலாம் என்று போலீஸார் நம்புகின்றனர்.

இதையடுத்து சோட்டாராஜனைப் பிடிக்கும் முயற்சியில் தாய்லாந்து போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து செக் போஸ்ட்டுகளிலும் சோட்டாராஜன் படம் வைக்கப்பட்டு பிடிக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, மும்பையிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X