அதிரடிப் படை வெற்றி பெறும் .. மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப் படையினருக்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
108 நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்துள்ளார். தற்போது வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இரு மாநில அரசுகளும்இறங்கியுள்ளன.
தமிழக, கர்நாடக அரசுகள் அதிரடிப் படையை காட்டுக்கு அனுப்பியுள்ளது. இந்த முயற்சியில் கண்டிப்பாக அதிரடிப் படையினருக்கு வெற்றி கிடைக்கும்.
நடிகர் ராஜ்குமார் மீட்பு விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாகியுள்ளது. எனினும் ராஜ்குமார் விடுதலையடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதுகுறித்து நான் வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications