கொரிய கார்ப் பந்தயம்: நரேன் கார்த்திகேயன் சாம்பியன்
Subscribe to Oneindia Tamil
சாங்க்வான் (கொரியா):
கொரியாவில் நடந்த பார்முலா 3 இன்டர்நேஷனல் சூப்பர் ப்ரீ கார் பந்தயத்தில், இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் வெற்றி பெற்றுசாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில், போட்டி தூரத்தை 30 நிமிடம் 05.899 விநாடிகளில் நரேன் கடந்தார். ஆரம்பத்திலிருந்தே நரேன்முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகலைச் சேர்ந்த டியகோ மான்டீரியோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.இத்தாலியின் புரூனி 3-வது இடத்தைப் பெற்றார்.
நரேன் கார்த்திகேயனின் அடுத்த இலக்கு பார்முலா 1 பந்தயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications