அசாருக்கு வாழ் நாள் தடை வருமா?
டெல்லி:
மாதவன் கமிட்டி அறிக்கையில் அசாருதீன் மாட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் மற்றவீரர்கள் சூதாட்ட ஏஜெண்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்ச் ஃபிக்சிங் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அசாருதீன். அஜய் ஜடேஜா, நயான்மோங்கியா, அஜய் ஷர்மா,மனோஜ் பிரபாகர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தியிருந்தது.இதை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் சி.பி.ஐ. இணைஇயக்குனர் மாதவனை நியமித்தது.
குற்றம் சுமத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்களையும், மருத்துவராக இருந்த அலி ஈரானிமற்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த டெல்லி பெரோஷ்ா கோட்லாவின் மைதானப்பணியாளர் ராம் ஆதர் ஆகியோரையும் விசாரித்து 340 பக்கங்கள் கொண்டஅறிக்கையை கிரிக்கெட் வாரியத்திடம் சமர்பித்தார்.
மாதவன் கமிட்டியின் கருத்துக்களை அறிய விரும்பிய மத்திய விளையாட்டுத்துறைஅமைச்சர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் முத்தையாவைஅழைத்தார்.
உமாபாரதியை சந்தித்தபின் நிருபர்களிடம் முத்தையா கூறுகையில், சி.பி.ஐ. கூறியகுற்றச்சாட்டுகளை மாதவன் அறிக்கையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அசாரூதீன் மீது மாட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. மோங்கியா தவிரமற்ற வீரர்கள் கிரிக்கெட் சூதாட்ட ஏஜென்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மோங்கியாவுக்கு சூதாட்ட ஏஜென்டுகளுடன் தொடர்பு எதுவும் இல்லை.
அலி ஈரானிக்கும் கிரிக்கெட சூதாட்ட ஏஜென்டுகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.அவர் கிரிக்கெட் வீரர்களுக்கும், சூதாட்ட ஏஜென்டுகளுக்கும் இடையே பாலமாகஇருந்திருக்கிறார். பணமும் இவர் மூலமாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளது.
கபில் தேவுக்கு எதிராக சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.அதே போல் பெரோஷ்ஷா கோட்லா மைதானத்தின் பணியாளர் ராம் ஆதரும் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
தவறு செய்த கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாதவன் பரிந்துரைசெய்துள்ளார்.
29-ம் தேதி கல்கத்தாவில கூடவிருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக் குழுகூட்டத்தில் மாதவன் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். அதன் பின்அறிக்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என முத்தையா கூறினார்.
அசாருக்கு தண்டனை:
சி.பி.ஐ. மற்றும் மாதவன் கமிட்டியால் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் அசாருதீனுக்குவாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.மற்ற வீரர்களுக்கு கடுமையான தண்டனை இருக்காது என தெரிகிறது.
29-ம் தேதி கூடும் ஒழுங்கு நடவடிக்க்ை குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தங்கள் பக்க நியாயத்தைக் கூற வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications