மீண்டும் பிரபலங்களைக் கடத்த வீரப்பன் திட்டம்?
ஈரோடு:
அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிக்கவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், மீண்டும் ஆட்களைக் கடத்த வீரப்பன் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்குத்தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து முக்கிய வனப்பகுதி அருகே உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு வீரப்பனைத் தீவிரமாகத் தேடும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வீரப்பன் மீண்டும்ஆட்களைக் கடத்தும் பணியில் ஈடுபடக் கூடும் என தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே கோபிச் செட்டிபாளையம் எம்.பி.காளியப்பன் மற்றும் பவானி எம்.எல்.ஏ., ஆகியோரைக் கடத்த திட்டமிட்டிருப்பதாக வந்ததகவலையடுத்து இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக சத்தியமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏவும், ம.தி.மு.க பிரமுகருமான சுப்ரமணியம், முன்னாள் பஞ்சாயத்துயூனியன் தலைவர் ராமண்ணா, தாளவடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி வெங்கட்ராமன் ஆகியோரை வீரப்பன் கடத்த திட்டமிட்டுள்ளான் என்றதகவல் ரகசியப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்துள்ளது.
எனவே இவர்களைப் பாதுகாப்பாக இருக்கும் படி உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே இரவில் வீட்டில் தூங்காமல் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பாதுகாப்புடன் வெளியில் செல்லவும்உத்தரவிட்டுள்ளனர்.
இதுதவிர, கடம்பூர் போலீஸ் ஸ்டேஷனை தாக்கவும் வீரப்பன் திட்டமிட்டுள்ளதால் இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் இயந்திர துப்பாக்கி ஏந்தியஅதிரடிப்படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications