For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரானில் போதைப் பொருட்கள் கடத்திய 10 பேர் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

டெக்ரான்:

போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேரை ஈரான் போலீஸார் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர். மேலும்ஆப்கான் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 6 பேரை போலீஸார் மீட்டனர்.

ஈரானில் உள்ள காஷ்மர் எஸ்பரேயின் பகுதிகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈரான் போலீஸார் சோதனைநடத்தினர். காஷ்மர் பகுதிய ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியாகும்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கான் தீவிரவாதிகள் ஈரான் போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றனர். மேலும் 8போலீஸ்காரர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர். இப்பகுதி வழியாக போதைப் பொருட்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குக் கடத்தப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதியில் போலீஸார் ஆப்கான் தீவிரவாதிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருட்களைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 10 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் ஆப்கான் தீவிரவாதிகளிடமிருந்து 6 போலீஸாரும்மீட்கப்பட்டனர். இன்னும் இரண்டு போலீஸார் அவர்கள் பிடியில் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X