சபரிமலையில் உற்சவபலி பூஜை
பந்தனத்திட்டா:
சபரிமலையின் மண்டல பூஜை திருவிழாவின் 7-வது நாள் உற்சவபலியுடன்துவங்கியது.
கார்த்திகை மாதம் 1-ம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்சன்னிதானத்தின் நடை திறக்கப்பட்டது. 7-வது நாளான செவ்வாய்கிழமை உற்சவபலிஎன்ற பூஜை நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமுற்றனர்.
ஐயப்பன் சன்னிதானத்தின் 18-ம் படியில் ஏறி ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கானபக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் சொப்பனத்தைஅடையும்வரை காத்திருந்தனர். நெய் அபிஷேகம் காலை 10.30-க்கு நடை பெற்றது.
மேல்சாந்தி சம்பு வாத்யார் நம்பூதிரி ஸ்ரீபலி பிம்பத்ததை அதற்கென சிறப்பாகஅமைக்கப்பட்டிருந்த பீடத்திற்கு எடுத்துச் சென்றார்.
தீபாராதனை முடிந்தவுடன் ஸ்ரீபலி பிம்பம் மீண்டும் திருக் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஆயிரக் கணக்கான பக்தர்கள் உற்சவ பாலியைக் காண சன்னிதானத்தில்திரண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 18-ம் படியில் ஏறுவதற்குகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அத்தாழ பூஜைக்குப் பின் ஸ்ரீ பூதா பலி நடை பெற்றது.ஐயப்பனின் உற்சவர்ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது எடுத்துச் செல்லப்பட்டார்.
சன்னிதானமும், திருமுட்டமும் ஊர்வலத்தின் போது விளக்குளால்அலங்கரிக்கப்பட்டிருந்தன. நவம்பர் 30-ம் தேதியன்று சரங்குத்திஆவில்பலிவெட்டா நடைபெறும். ஆராட்டு விழா டிசம்பர் மாதம் 1-ம் தேதியன்றுபம்பாவில் நடைபெறும்.
யு.என்.ஐ.