குற்றவாளிகளை ஒப்படைக்க அமெரிக்கா- இலங்கை புதிய ஒப்பந்தம்
கொழும்பு:
குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளும் வகையில் அமெரிக்காவுடன்இலங்கை மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இலங்கை வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கார்ல்இண்டர்பர்த்தும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்மண் கதிர்காமரும் இந்தஒப்பந்த்தில் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் உள்ளது. இதில் சிலதிருத்தங்களோடு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நட்புறவு குறித்து இரு தலைவர்களும் திருப்திதெரிவித்தனர்.
நாடு கடத்தும் ஒப்பந்தம் 68 ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில்கையெழுத்திடப்பட்டது. காலம் கடந்தஅந்த ஒப்பந்தத்தை புதிய ஒப்பந்தம் மாற்றிஅமைக்கிறது.பழைய ஒப்பந்தத்தில் இருந்த குறைகள் புதிய ஒப்பந்தத்தில்நீக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்கா இந்த ஒப்பந்த்தில் கையெழுத்திட்டு அனுப்பியவுடன் இது நடைமுறைக்குவரும்.
இன்டர்பர்த், இலங்கை சபாநாயகர் அனுரா பண்டாரநாயகேயையும் சந்த்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இன்டர்ஃபோர்த் இந்தியா, நேபாள், பூடான் நாடுகளுக்கும்பயணம் செய்ய இருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.