காந்தி அமைதி விருது பெறுகிறார் மண்டேலா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தென் ஆப்பிரிக்கா நாட்டு முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கும், வங்காள தேசத்தில் உள்ள ஒருகிராமப்புற பாங்கிக்கும் 2000 மாவது ஆண்டுக்கான காந்தி அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.

சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியில் துறைகளில் பெரிய சாதனை நிகழ்த்துபவர்களுக்கு காந்தி அமைதிவிருது வழங்கப்பட்டு வருகிறது.

காந்தி பிறந்த நாள்:

மகாத்மா காந்தியின் 125 வது பிறந்த நாளையொட்டி கடந்த 1995 ம் ஆண்டு இந்த மிகப் பெரிய விருதுநிர்மாணிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு ரூ 1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் அறிக்கை:

மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அனந்த குமார் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

2000 மாவது ஆண்டிற்கான காந்தி அமைதி விருது தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் நெல்சன்மண்டேலாவுக்கும், வங்க தேசத்தில் உள்ள கிராமப்புற பாங்கி ஒன்றுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.

மண்டேலாவின் சமூக சேவையும், அந்த பாங்கியின் பொருளாதார சேவையையும் பாரட்டி இந்த விருதுவழங்கப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விருது வழங்கும் விழா:

விருது வழங்கும் விழா டெல்லியில் நடக்கிறது. ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருதை வழங்குகிறார். எப்போதுவிருது வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+