For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஸ் ஜார்ஜ் ஆனார் மாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 32 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் வியாழக்கிழமைகாலை அங்கிருந்து வீடு திரும்பினார்.

மிகவும் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்புடனும் காணப்பட்ட மாறன் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து மிகவும் வேகமாக நடந்து வெளியே வந்தார்.

தன்னைச் சாவிலிருந்து காப்பாற்றிய டாக்டர்களின் கரத்தை அவர் அன்புடன் பற்றி நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், அப்பல்லோமருத்துவமனையில் மிகவும் சிறப்பாக என்னைக் கவனித்துக் கொண்டார்கள்.

என்னை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வந்தவர்கள் அப்பல்லோ மருத்துவர்கள். இது எனக்கு மறுவாழ்வு என்றார்.

முன்னதாக, மாறன் நவம்பர் மாதம் அக்டோபர் 28 ம் தேதி ஒற்றைத் தலைவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.நவம்பர் 7 ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர் ஜெர்மன் மற்றும் லண்டன் டாக்டர்கள் சென்னை வந்து அவருக்கு சிகிச்சைஅளித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

யு.என். ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X