புயல்: 48 தமிழக மீனவர்களைக் காணவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை காசிமேடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் மீன் பிடிக்கச் சென்ற 48 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகத் தெரிய வந்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை, சூறாவளிக் காற்றுஏற்பட்டது.

இதனால் கடலூர், நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயல் மழையில் சிக்கி இதுவரை 12 பேர்இறந்துள்ளனர்.

புதுவையில் 2 பேர் பலி:

புதுவையில் இரண்டு பேர் பலியானார்கள். 13 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல குடிசைகள் சரிந்து விழுந்துள்ளன. பலவீனமானகட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் கடலூரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக தென்னை மரங்கள் அதிக அளவில் முறிந்து விழுந்தன.

மீனவர்களைக் காணவில்லை:

சென்னை காசிமேடு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 48 மீனவர்களை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் சந்தீப் சக்ஸேனா தலைமையில் நிவாரணப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+