டிச.4 ல் டெராடூன் செல்கிறார் தேர்தல் ஆணையர் கில்
டெல்லி:
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உத்தராஞ்சல் மாநிலத்தில் சட்டசபை தொகுதிகளை முடிவு செய்வதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.எஸ்.கில் ஒரு நாள்சுற்றுப்பயணமாக டெராடூன் செல்கிறார்.
அங்கு அவர் புதிய சட்டசபைத் தொகுதிகள் அமைப்பது குறித்து அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார். இதற்காக இவர் டிசம்பர் 4 ம் தேதிஉத்தராஞ்சல் மாநில தலைநகர் டெராடூன் செல்வார் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
டெராடூன் செல்லும் கில் அங்கு மாநில கவர்னர், முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ளஅனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார். சட்டசபைத் தொகுதிகள் முடிவானதும் தேர்தல் அறிவிக்கப்படும்.
கில்லின் சுற்றுப் பயணத்தை அடுத்து தேர்தல் வேலைகள் ஆரம்பமாகும் என்றும் அரசுச் செய்திக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
யு.என்.ஐ.