மஞ்சள் நிறத்தில் 500 ரூபாய் நோட்டு
சென்னை:
கள்ள நோட்டுக்களை இனம் பிரித்தரியும் வகையில் மஞ்சள் நிறத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் பாங்க் வெளியிட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டுக்களும், 100 ரூபாய் நோட்டுக்களும் ஒரே மாதிரி இருப்பதால் பொது மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் 500 ரூபாய்கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாக உள்ளது.
இதைத் தடுக்கும் வகையில் ரிசர்வ் பாங்க் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மஞ்சள், பிரவுன்நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டைப் பார்த்து உண்மையான 500 ரூபாய் நோட்டை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
மேலும் இந்த 500 ரூபாய் நோட்டில் 500 என்ற எழுத்துக்கும் நிறம் மாற்றப்பட்டுள்ளது. இந்த எழுத்து பச்சை நிறத்தில் தெரியும். சரிவாக வைத்துப்பார்த்தால் நீல நிறுத்தில் தெரியும்.
எனவே பழைய 500 ரூபாய் நோட்டுக்களைப் பொதுமக்கள் ரிசர்வ் பாங்க் அல்லது பொதுத்துறை பாங்கிகளில் கொடுத்து புதிய 500 ரூபாய் நோட்டுக்களைப்பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் பாங்க் அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications