ஹெலிகாப்டர் மூலம் வீரப்பனைத் தேட முடிவு
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க விமானப் படை உதவியை வழங்குகிறோம் என்று மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டையைத்தீவிரப்படுத்துவது என்று பெங்களூரில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கர்நாடக தமிழக அரசுகளுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கி வரும் வீரப்பனைப் பிடித்தே தீருவது என்று இரு மாநில போலீஸ் அதிகாரிகளும் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கர்நாடக போலீஸ் அதிகாரிகள் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூர் நிருபதுங்கா ரோட்டில் உள்ள போலீஸ் டிஜிபி அலுவலகத்தில்நடந்தது. இதில் தமிழக ஐஜி பாலச்சந்திரனும் கலந்து கொண்டார்.
கர்நாடக டிஐஜி பேட்டி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் தமிழக, கர்நாடக, போலீஸ் அதிகாரிகளுடன்,எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் சேர்ந்து செயல்படுவார்கள்.
இதற்காக தமிழகத்திலிருந்து 1000 போலீஸாரும், கர்நாடகத்திலிருந்து 1000 போலீஸாரும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் 1000 பேரும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக ஐஜி பாலச்சந்திரன் அதிரடிப்படைக்குத் தலைமை தாங்குவார். மேலும், சங்கர் பிதரி, சாங்கிலியானா ஆகியோரும் இதற்கு இணைத் தலைவர்களாகஇருப்பார்கள்.
புலிகளுடன் வீரப்பன்:
வீரப்பனுடன் விடுதலைப் புலிகள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவருடன் தமிழ்த் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். முதலில் சாட்டிலைட்உதவியுடன் வீரப்பனைத் தேடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு விமானப்படை உதவி செய்ய முன்வந்ததைத் தொடர்ந்துஹெலிக்காப்டர் மூலம் வீரப்பனைத் தேடுவது என முடிவு செய்துள்ளது.
வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. அதனால் வீரப்பன் விரைவில் பிடிபடுவார் என்றார் தினகர்.