தவறான பதிலளித்து மிஸ் வேர்ல்டு ஆனார் சோப்ரா
லண்டன்:
லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டியில் தனக்குக் கேட்ட கேள்விக்குத் தவறான பதிலைத் தான் அளித்துள்ளேன் என்று மிஸ் வேர்ல்டு 2000 பிரியங்காதெளிவு படுத்தியுள்ளார்.
அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், அழகிப் போட்டி நடந்த போது, உலகிலேயே சாதனைப் பெண் மணியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் யார்என்று கேட்டார்கள்.
ஆனால் என் மன ஆழத்தில் சாதனைப் பெண்மணி என்றால் நினைவுக்கு வருவது அன்னை தெரசாதான். தன் வாழ்க்கையைப் பெரிதாக நினைக்காமல்ஏராளமான மனிதர்களின் வாழ்விற்காக தன்னை அர்பணித்தவர் அவர் என்றேன்.
நடுவர்கள் கேட்டது வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனைப் பெண் யார் என்பதுதான். ஆனால் நான் மறைந்த அன்னை தெரசாவைத் தான் குறிப்பிட்டேன்.அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நடுவர்கள், மறைந்தும் வாழும் அன்னை தெரசாதான் சாதனைப் பெண்மணி என்பதை ஒப்புக் கொண்டார்கள்.
மேலும், நான் தவறாகச் சொன்ன பதிலே என்னை அழகிப் போட்டியில் வெற்றி பெற வைத்து விட்டது. ஆனால் இது நான் வெற்றி பெற்ற பின் தான்எனக்கே தெரிய வந்தது.
அழகிப் போட்டியில் என்ன கேட்கப் போகிறார்கள் என்பதை நாம் முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் மாய ஜால வித்தை இருக்கிறதா என்ன?சூரியனுக்குக் கீழே உள்ள எதை வேண்டுமானாலும் அழகிப் போட்டியில் கேட்கலாம்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் உலகில் தினமும் என்ன நடக்கிறது என்பதைத்தான்.
அழகிப் போட்டியில் வெற்றி பெறணும்னா வெறும் உடலழகை மட்டும் பார்க்க மாட்டார்கள். புத்திசாலித்தனமும் தேவை என்றார்.
ஒரு கேள்வியால்:
அழகிப் போட்டியில் கேட்கப்படும் ஒரு கேள்விக்குத் தப்பான பதில் அளிக்கப்பட்டால் வெற்றி கிடைக்காது என்ற விதியில்லை என்று போட்டிநடத்தியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.