புலிகளுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியது ராணுவம்
கொழும்பு:
இலங்கையின் வடக்கு பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இலங்கையின் வடக்கு பகுதியில் இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதலை தொடர்ந்ததை அடுத்து அங்கு கடும் சண்டை நடந்து வருகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பின் இலங்கை ராணுவம் நடத்தும் முதல் தாக்குதல் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் முக்கியமானபகுதிகளில் ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர் என்றார்.
ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் சனாத் குமாரரத்னே கூறுகையில்,நுணவில்லுக்கு மேற்கே உள்ள பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரம்முன்னேறியிருக்கிறோம் என்றார். இந்தப் பாதை யாழப்பாணத்தையும்சாவகச்சேரியையும் இணைக்கும் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பினர் எதுவும் கூறவில்லை.












Click it and Unblock the Notifications