வட கிழக்கு பருவ மழை ஆரம்பம்
சென்னை:
சென்ற சில நாட்களாக வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிறுவனம்தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து மழை அறிவிப்பை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.அந்த அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது:
ஆந்திராவின் தெற்கு கரையோரம், வட தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ராயல் சீமா பகுதிகளில் இடியுடன் கூடிய மழையோ அல்லது பலத்த மழையோ பெய்யக்கூடும்.
தென் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவின் உள் பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டிருக்கிறது.
தமிழகம்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை,வேலூர்,சேலம், கோயம்புத்தூர்,ஈரோடு, நீலகிரி, கரூர், பெரம்பலூர்,திருச்சி மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மற்ற பகுதிகளிலும் மழை பெய்யும்.