பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்: இலங்கை பிரதமர்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர நார்வே தூதுக்குழு சமரச முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த சமரசப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை பிரதமர் விக்கிரமசிங்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தீவிரவாதத்தை ராணுவ நடவடிக்கை மூலமே ஒழிக்கமுடியும் என்று அவர் கூறினார்.
இப்போது அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த சனிக்கிழமை இலங்கையை அடுத்துள்ள ஹொரானா என்ற இடத்தில் நடந்த ஒருவிழாவில் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் நான் குறுக்கிட மாட்டேன். நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பிரபாகரன்அறிவித்திருப்பது உண்மையானால் இது அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உதவும்.
பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த ஒரு இழிசெயலில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.












Click it and Unblock the Notifications