புலிகளின் கண்ணிவெடியில் பஸ் சிதறி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் மட்டகளப்பு பகுதியில் புலிகள் வைத்த கண்ணிவெடியில் பஸ் சிக்கியதில் பஸ் பயணிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் புதன்கிழமை பிற்பகல் நடந்தது. இவ்விபத்தில் பஸ் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. விபத்தில் காயமடைந்த அனைவரும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நுணவில் பகுதியில் ராணுவ வீரர்கள், விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆகஉயர்ந்துள்ளது. உயிரிழந்தோரில் ராணுவ வீரர்கள் 12 பேர்.
இருதரப்பினரையும் சேர்த்து மொத்தம் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
யு.என். ஐ












Click it and Unblock the Notifications