அனில் கும்ப்ளே, ஆர்த்தி ராமசாமிக்கு பிர்லா விருது
டெல்லி:
விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனைகளைப் பாராட்டி, கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவுக்கும், செஸ் விளையாட்டு வீரர் ஆர்த்தி ராமசுவாமிக்கும்1999-2000ம் ஆண்டிற்கான பிர்லா விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டுத்துறையில் சாதனை புரியும் வீரர்களுக்கு 1991 ம் ஆண்டு முதல் கே.கே.பிர்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறும்வீரர்களுக்கு ரூ 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கி கெளரவிக்கப்படும்.
1991 ம் வருடம் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும், ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை புவனேஸ்வரி குமாரியும் இந்தவிருதைப் பெற்றனர்.
விஸ்வநாதன் ஆனந்த், ரமேஷ் கிருஷ்ணன், பகதூர் பிரசாத், ஜஸ்பால் ரானா, மல்லேஸ்வரி, சச்சின் டென்டுல்கர், தன்ராஜ் பிள்ளை, மகேஷ் பூபதி ஆகியோர்இந்த விருதுகளைப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அனில் கும்ப்ளே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறந்த பவுலர். இவர் 1990 ம் வருடம் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில்சிறந்த முறையில் ஆடினார். அந்த ஆண்டு முதல் இவர் கிரிக்கெட்டில் தனது தனித்திறமையைப் பறைசாற்றி வருகிறார்.
சமீபத்திய வருடங்களில் நடந்த கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் பல சாதனைகள் புரிந்துள்ளார். மேலும் தற்போது இந்திய அணி இவரையே பெரிதும்சார்ந்திருக்கிறது.
யு.என்.ஐ.