கூட்டணிக்கு நிபந்தனை விதிக்க மாட்டோம்
சேலம்:
எங்கள் கருத்தைச் சொல்வோமே தவிர, கூட்டணிக்கு நிபந்தனை விதிக்க மாட்டோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்இளங்கோவன் தெரிவித்தார்.
சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அதே சமயம், நடைமுறைக்கு எத்தகைய ஆட்சி சாத்தியமோ அதைத் தான் நாங்கள்ஏற்றுக் கொள்வோம்.
எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் எங்களது கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கூட்டணிக்கட்சிகளுக்கு நிபந்தனை விதிக்க மாட்டோம். இதில், காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க விற்கு இடையே எவ்வித பிரச்னையும் இருக்காது.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்காது என்றே கருதுகிறேன். ஆனால், தேர்தல் வரும்போது எப்படி வேண்டுமானாலும் மாறவாய்ப்பு உள்ளது. இதனை யூகத்தின் அடிப்படையில் இப்போதே தீர்மானிக்க முடியாது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் காங்கிரசும் இணைந்து மூன்றாவதுஅணி அமைக்கப் போவதாகக் கூறுவது வெறும் யூகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளே.
பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து செல்வதை கருணாநிதி விரும்பவில்லை. எனவே கருணாநிதி இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்துஎவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
சண்டிகரில் நடந்த ரயில் விபத்திற்கு முழுப் பொறுப்பேற்று மம்தா பானர்ஜி ராஜினமா செய்தார். இந்த ராஜினமாவை ஏற்றுக் கொண்டதாக பிரதமர்அறிவித்தார்.
ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் இதற்கு மறுப்புத் தெரிவித்து பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டது. தான் என்ன பேசுகின்றோம் என்பதைஅறியாதவர் பிரதமாராக நீடிக்கக் கூடாது. உடனே ராஜினமா செய்ய வேண்டும்.
அரியலூரில் ரயில் விபத்து நடந்தபோது அமைச்சர்களாக இருந்த அழகேசன் ராஜினமா செய்ய வேண்டும் என அப்போது கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்று அழகேசன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். இப்போது கருணாநிதி, மம்தா பானர்ஜி ராஜினமா செய்ய கோரிக்கைவிடுப்பாரா?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரை சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications