நாளை கோவில் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
சென்னை:
தமிழகத்தில் கோவில் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தம்செய்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக திருக்கோவில் பணியாளர் சங்கங்களின் தலைவர் நல்லதம்பிவெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 36, 324 கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வூதியம்,பணிக்கொடை விடுப்புச் சலுகை பாரபட்சமின்றி அனைத்து பணியாளர்களுக்கும்வழங்குதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து அரசைக்கேட்டு வருகிறார்கள்
இதற்காக இதுவரை 3 கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. கோவில்பணியாளர்களின் நியாயமான போராட்டங்களுக்கு அரசு ஊழியர்கள் சங்கம்,அறநிலையத்துறை அலுவலர்கள் சங்கம் உள்பட அரசு சார்ந்த அமைப்புக்களும் அரசுசாரா அமைப்புக்களும் ஆதரவு தருகின்றன.
கடந்த 5 ம் தேதி அறநிலையத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
முதல்வர் எங்கள் விஷயத்தில் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற உதவி செய்யவேண்டும். மேலும் நாங்கள் 8 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை தொடர்ந்துவேலைநிறுத்தப் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications