சொர்க்கத்துக்கு வந்து விட்டேன்: ராஜ்குமார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

காட்டில் இருந்து நகருக்கு திரும்பியதும் சொர்க்கத்துக்கு வந்தது போல பரவசமடைந்தேன் என்று என்று ராஜ்குமார் கூறினார்.

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் மீட்கப்பட்டது வரை உள்ள அனுபவங்கள் குறித்து ரேடியோவில் பேசினார்.

இது தினமும் காலை 7.45 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பாகிறது. பேட்டியில் ராஜ்குமார் கூறிய விவரங்கள் ஒரு சிறு தொகுப்பு:

வீரப்பனால் கடத்தப்பட்டது எனது துர்பாக்கியம். அவரிடமிருந்து மீட்கப்பட்டபின்பு நான் எல்லையில்லா ஆனந்தமடைந்தேன். முதலில் என்குடும்பத்தாரையும், பின்னர் ரசிகர்களையும் பார்த்தேன்.

எனது குடும்பத்தாரையும், ரசிகர்களையும் பார்த்ததும் என் கண்கள் குளமாயின. நான் மீண்டு வந்ததும் எனது ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது இன்னும்என் கண் முன் நிழலாடுகிறது.

அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் காட்டிலிருந்து, நாட்டுக்குத் திரும்பியதும் சொர்க்கத்துக்கு வந்ததுபோல் மகிழ்ச்சியடைகிறேன்.

என் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நான் காட்டில் இருப்பது போன்று பீதியடைகிறேன்.

வீரப்பன் ஆட்கள் காட்டில் என்னை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். அவர்கள் எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. நான்காட்டிலிருந்து வெளியேறிய போது என் வாழ்க்கையில் சூரிய உதயம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன் என்று ரேடியோவில் பேசியுள்ளார் ராஜ்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+