அரசு ஊழியரை தாக்கிய முனிசிபல் சேர்மன் கைது
திருப்பூர்:
தி.மு.க.வைச் சேர்ந்த முனிசிபல் சேர்மன், பணியிலிருந்த அரசு ஊழியரை அவரது வேலையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக கைது செய்யப்பட்டுவெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:
திருப்பூர் முனிசிபல் சேர்மன் செல்வராஜூம், அவரோடு சென்ற சிலரும் வியாழக்கிழமை திருப்பூரிலிருக்கும், திருப்பூர் இல்லம் என்ற பொதுப் பணித்துறைவிருந்தினர் மாளிகைக்குச் சென்று 50 நாட்கள் தங்குவதற்கு அறை பதிவு செய்ய வேண்டுமென கேட்டனர். அப்போது செல்வராஜ் குடிபோதையில் இருந்தார்.
ஆனால் அது போல் வெகுநாட்கள் தங்குவதற்கு அறை தரமுடியாது என
சப்- டிவிஷனல் என்ஜினியர் கண்ணாம்பாள் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது.
இந்நிலையில் செல்வராஜ் அங்கிருந்த ஜூனியர் என்ஜினியர் முத்துசாமியையும், பொதுப்பணித்துறை அலுவலக ஓட்டுனர் பழனிசாமியையும் தாக்கினார். இதைத்தொடர்ந்து கண்ணாம்பாள் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.
இதையடுத்துகோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இருக்கும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாகஎச்சிரித்துள்ளனர்.
யு.என்.ஐ.