மதுரையைக் கலக்கிய ஸ்டாலின்
மதுரை:
தமிழக முதல்வர் மகனும், சென்னை நகர மேயருமான மு.க.ஸ்டாலின் 500-க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழமதுரைக்கு விஜயம் செய்தார்.
வெள்ளிக்கிழமை சமத்துவபுரம் திறப்பு விழா, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளஸ்டாலின் மதுரை வந்தார்.
அவரை வரவேற்க பெருமளவில் வரவேற்பு வளைவுகள், சாலை முழுவதும் கொடிகள், தோரணங்கள், கருணாநிதி,ஸ்டாலின் உருவ மின் அலங்கார கட்டவுட்டுகளும் வைத்து தி.மு.க.வினர் அமர் களப்படுத்தியிருந்தனர்.
ஸ்டாலினுக்கு பெருங்குடியிலிருந்தே உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் 10அடிக்கு ஒன்ற என்ற விகிதத்தில் சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.
முதல்வருக்கு வழங்கும் பாதுகாப்பு போல் ஸ்ாடலினுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. காலை முதலேபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நண்பகல் 12 மணிக்கு 240 கார்கள் பின்தொடர விருதுநகரிலிருந்து பெருங்குடி வந்தார். அங்கு பெருங்கூட்டத்தில்திணறி முன்னேறி பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டுகொடுத்து வரவேற்றனர்.
முன்னரே இருந்த 240 கார்களுடன் மேலும் 270 கார்கள் சேர்ந்து கொள்ள 500-க்கும் மேற்பட்ட கார்கள் தொடரமதுரை சர்க்யூட் ஹவுசுக்கு சென்றார் ஸ்டாலின். அங்கு அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேலு, போலீஸ்கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த கார் ஊர்வலம் 2 மணி நேரம் மதுரை நகரின் வடக்கு பகுதி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. 500-க்கும்மேற்பட்ட கார்கள் சர்க்யூட் ஹவுஸ் பகுதியில் நிறுத்தப்பட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சில தினங்கள் முன்பு ஜெயலலிதா வந்த போது நடந்த ஆடம்பர வரவேற்பால் முகம் சுளித்த மதுரை மக்களுக்குஸ்டாலினின் இந்த மதுரை விஜயத்தால் ஏற்பட்ட கஷ்டம் பெரும் மனக் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications