தீவிரவாதிகளை ஒடுக்க அஸ்ஸாமுக்கு கூடுதல் ராணுவ வீரர்கள்
குவஹாத்தி:
கடந்த 6 வாரங்களில் அஸ்ஸாமியர் அல்லாத 116 பேர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அஸ்ஸாமுக்கு கூடுதல் ராணுவப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மட்டுமல்லாமல் அருணாசலப் பிரதேசத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் படுகொலைகளில்ஈடுபட்ட உல்பா தீவிரவாதிகள் அருணாசலப் பிரசேதத்துக்கு தப்பி செல்வதாக வந்த தகவலை அடுத்து அங்கும் ராணுவத்தினர்குவிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர அருணாசலப் பிரதேசத்தில் உல்பா தீவிரவாதிகள் முகாம்களையும் அமைத்துள்ளனர்.
இவர்களை இங்கிருந்து விரட்டி அடிக்க ராணுவ உதவி வேண்டும் என அருணாசலப் பிரசேதம் கோரியுள்ளது.
அஸ்ஸாமுக்கு மட்டும் 27 கம்பெனி (2,700 வீரர்கள்) ராணுவப் பிரிவுகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தப் படைகள்அஸ்ஸாம், அருணாசலப் பிரதேச காட்டுப் பகுதியில் தீவிர சோதனைகள் நடத்தவுள்ளன. இந்தக் கொலைகள் தொடர்பாக சுமார் 9பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைகளை கண்டித்து பேரணி:
அஸ்ஸாமியர் அல்லாதவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதைக் கண்டித்து குவஹாத்தியில் சனிக்கிழமை மாபெரும் பேரணிநடந்தது.
சுமார் 5,000 பேர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில், அனைத்து தீவிரவாத அமைப்புகளும் உடனடியாக தங்களது தாக்குதலைநிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.