For Daily Alerts
Just In
மசூதியில் நுழைந்து தாக்குதல், ஒருவர் கொலை
திருநெல்வேலி:
நள்ளிரவில் இஸ்லாமியர்களின் மசூதிக்குள் நுழைந்த கும்பல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஒருவரைக் குத்திக் கொலைசெய்தது.
மசூதியின் மீது குண்டும்வீசப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் சனிக்கிழமை நள்ளரவில் இச் சம்பவம் நடந்தது.
அங்கு நோன்பு தொடங்குவதற்கான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது நள்ளிரவு 1.30 மணிக்கு சுமார் 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.அனைவரையும் கடுமையாகத் தாக்கியது.
அனைவரும் சிதறி ஓடினர். அப்துல் ரஷீத் என்பவர் இத் தாக்குதலில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை அந்தக் கும்பல் கத்தியால் குத்திக்கொன்றது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, May 16, 2000, 5:30 [IST]