புதுவையில் காங். பா.ஜ.க மோதல் தீவிரம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பாரதிய ஜனதா கட்சியினர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெயகுமாரை உடனே பதவி நீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் பாண்டிச்சேரியின் கூட்டுறவுத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக பொதுப்பணித்துறைஅமைச்சர் கண்ணன் புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் கண்ணனை பாண்டிச்சேரி முதல்வர் பதவி நீக்கம் செய்தார்.
இது குறித்து பாண்டிச்சேரி பா.ஜ.க. தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
முதல்வர் சண்முகம் கண்ணனை பதவி நீக்கம் செய்ததால் ஜெயக்குமாருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுக்கிறது.மேலும் காங்கிரஸ் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
முதல்வர் உடனே ஜெயக்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் அவ்வாறு செய்யா விட்டால் துணை நிலை ஆளுநர் பாண்டிச்சேரி அரசை கலைக்குமாறுமத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும். கண்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.