மருத்துவமனையில் காளிமுத்து
சென்னை:
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அவைத் தலைவருமான காளிமுத்து நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமைஅனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் நீண்ட காலம் அமைச்சராக இருந்தவர் காளிமுத்து. தற்பொழுதுஅ.தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருகிறார்.
மத்திய அரசைக்கண்டித்து பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காளிமுத்து கலந்து கொண்டு பேசினார்.கூட்டம் முடிந்த பிறகு அங்கிருந்த தலைவர்களிடம் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தார். அங்கு அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக அப்பல்லோமருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெ.வுக்குத் தகவல்:
மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல் நிலை விபரம் குறித்து ஹைதராபாத்தில் உள்ள அ.தி.மு.கழகபொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications