தீப்பெட்டி ஊழியர்களுக்காக தாமரைக்கனி மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஊதியக் குறைப்பை எதிர்த்து தீப்பெட்டித் தொழிலாளர்கள் அதிமுக எம்.எல்.ஏ.தாமரைக்கனி தலைமையில்ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ தாமரைக்கனியை போலீஸார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் மாதம்தென்னிந்திய தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்கம், சி.பிரிவு தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுவழங்குவதாக அறிவித்திருந்தது.
ஆனால் ஊதிய உயர்வுக்கு டி பிரிவு தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சிபிரிவு தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சங்கம் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்ததுடன் தீப்பெட்டித் தொழிலாளர்களின்ஊதியத்தையும் குறைத்தது.
இதனால் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள்அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாமரைக்கனியிடம் புகார் செய்தனர். இதையடுத்து தாமரைக்கனி, அந்த 200 பெண்தொழிலாளர்களையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அதற்கு தாமரைக்கனி சம்மதம்தெரிவிக்காததால் போலீஸார் அவரையும், 200 பெண்களையும் கைது செய்து, பின்னர் மாலை விடுதலைசெய்தனர்.