ஜெ. வழக்கு: டிச.27ல் சாட்சிகள் விசாரணை
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள வருமான வரி பாக்கி வழக்கு விசாரணை டிசம்பர்மாதம் 27 ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன், வருமான வரித்துறை உதவி கமிஷனர் சீனிவாசனிடம் இந்த வழக்குகள் குறித்தானசாட்சிகளை நீதிமன்றத்தில் வரும் 27 ம் தேதி சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
1993 ம் ஆண்டு முதல் 1994 ம் வருடம் வரை ஜெயலலிதா தனது சொத்து விவரங்கள் குறித்து வருமானவரித்துறையிடம் முறையான கணக்குகாண்பிக்கவில்லை. வருமான வரியும் கட்டவில்லை. இதையடுத்து இது குறித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்குஏற்கனவே குற்றப்பத்திரிக்கையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கு சென்னையிலுள்ள பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார் ஜெயலலிதா. 1996 ம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்துவழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையே கடந்த நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மனுச் செய்தனர். அந்தமனுவில் இந்த வழக்கு கடந்த 4 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் டிசம்பர் 27 ம் தேதி சாட்சியங்கள் விசாரிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள் என்றுவருமானவரித்துறை அதிகாரி சீனிவாசனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்படி 1993-94 ம் வருடங்களில் ஜெயலலிதாவின் ஆண்டு வருமானம் ரூ 1.04 கோடி. வருமான வரிவட்டியுடன் சேர்த்து ரூ 98 லட்சமாகும்.
யு.என்.ஐ.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications