ஜெ. வழக்கு: டிச.27ல் சாட்சிகள் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள வருமான வரி பாக்கி வழக்கு விசாரணை டிசம்பர்மாதம் 27 ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன், வருமான வரித்துறை உதவி கமிஷனர் சீனிவாசனிடம் இந்த வழக்குகள் குறித்தானசாட்சிகளை நீதிமன்றத்தில் வரும் 27 ம் தேதி சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

1993 ம் ஆண்டு முதல் 1994 ம் வருடம் வரை ஜெயலலிதா தனது சொத்து விவரங்கள் குறித்து வருமானவரித்துறையிடம் முறையான கணக்குகாண்பிக்கவில்லை. வருமான வரியும் கட்டவில்லை. இதையடுத்து இது குறித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்குஏற்கனவே குற்றப்பத்திரிக்கையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கு சென்னையிலுள்ள பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார் ஜெயலலிதா. 1996 ம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்துவழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதற்கிடையே கடந்த நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மனுச் செய்தனர். அந்தமனுவில் இந்த வழக்கு கடந்த 4 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் டிசம்பர் 27 ம் தேதி சாட்சியங்கள் விசாரிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள் என்றுவருமானவரித்துறை அதிகாரி சீனிவாசனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்படி 1993-94 ம் வருடங்களில் ஜெயலலிதாவின் ஆண்டு வருமானம் ரூ 1.04 கோடி. வருமான வரிவட்டியுடன் சேர்த்து ரூ 98 லட்சமாகும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+