லஞ்சத்தை ஒழிப்பதே லட்சியம் ..எஸ்.டி.எஸ்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். லஞ்சத்தை ஒழிப்பதே எங்களது லட்சியம் என்றுபுரட்சித் தலைவர் அதிமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

புரட்சித் தலைவர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.டி.சோமசுந்தரம், இணைப் பொதுச்செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் நிருபர்களுக்குஅளித்த பேட்டி:

புரட்சித் தலைவர் அதிமுக வின் முக்கியக் கொள்கைள் மூன்று. அவை தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிப்பது, பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதுமற்றும் ஜாதி அரசியலுக்குத் தடை விதிப்பது ஆகியவையாகும்.

இதை ஏற்றுக் கொள்பவர்களுடன்தான் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம். மதவாதத்தை விட ஊழல் பெரிதல்ல என்று கூறுவது எய்ட்சை விடகேன்சர் பரவாயில்லை என்று கூறுவது போலாகும்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று வாஜ்பாய் பேசியது மிகப்பெரியதவறாகும். இதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதோடு, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தற்போதைய இந்திய அரசு, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நீடித்தால் அதுஇந்தியாவுக்கே ஆபத்தாக முடியும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+