மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசு.. ஜெ.
சென்னை:
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக அரசால் சமூக விரோதிகளைஒடுக்க முடியவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்.
தமிழக அரசால் சமூக விரோதிகளை ஒடுக்க முடியவில்லை, பொதுமக்களையும் காக்கமுடியவில்லை என ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:
திருவள்ளுரில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடிய இரண்டு பெண்கள்கள்ளச்சாராய கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு இந்த விஷயத்தை தவறாககையாண்டு வருகிறது. போலீசாரும் கொலை செய்யப்பட்ட பெண்களின்உறவினர்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.
தமிழக அரசு பொதுமக்கள் மீது தவறான வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்.மேலும் திருவண்ணாமலையில் அமைச்சர் பிச்சாண்டி போலியோ சொட்டு மருந்துகொடுத்தவுடன் குழந்தை இறந்ததை எதிர்த்து போராடிய அ.தி.மு.க. தொண்டர்கள் மீதுபோடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற வேண்டும்,
பாளையங்கோட்டையில் மசூதியில் பைப் வெடிகுண்டு வீசி இரண்டு பேர்கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் மெதுவாகசெயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது எனகூறியுள்ளார்.
யு.என்.ஐ.