வீரப்பன் யாழ்ப்பாணத்திற்கு தப்பினாரா?
சென்னை:
வீரப்பன், யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் செல்லவில்லை என கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டு 108நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். தற்போது இரு மாநில அரசின் அதிரடிப்படை வீரர்களும் வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வீரப்பன் யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுவது குறித்துசென்னை வந்துள்ள கர்நாடக முதல்வரிடம் கேட்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சிஅலுவலகத்தில் கிருஷ்ணா இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
பல பத்திரிக்கைகளில் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் யாழ்ப்பாணம் தப்பிச்சென்றுவிட்டார்கள் என கூறி வருகின்றன. அது முற்றிலும் தவறானது. ஏனென்றால்வீரப்பன் இன்னும் காட்டில் தான் இருக்கிறான் என நம்புவதற்கு பல காரணங்கள்இருக்கின்றன.
இரு மாநில அரசின் அதிரடிப்படை வீரர்களும் வீரப்பனின் மறைவிடத்தைகண்டுபிடித்து அவனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்குஎல்லாவிதமான சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரசார் வீரப்பனை பிடிக்க தமிழக அரசு கர்நாடக அரசுடன்ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.ஏனென்றால் அது தற்போது நடந்து வரும் நடவடிக்கைகளை பாதிக்கும் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications