For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைதாவுக்குள் சாராயம் .. வற்றலுக்குள் கஞ்சா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மைதா மாவு மூட்டைக்குள் 1000 சாராய பாக்கெட்டுகளும், மிளகாய் வற்றல் மூட்டைக்குள் 250 கிலோ கஞ்சாவும் கடத்திய 10 பேரைபோலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகள், கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளையும் போலீசார் பறிமுதல்செய்தனர்.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், விற்போர் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானம் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்ககாவல் துறை கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஓசூர் - மாலூர் நெடுஞ்சாலையில் மதுவிலக்கு போலீசார், வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 12 சாக்குமூட்டைகளில் 1000 கர்நாடக சாராய பாக்கெட்டுகள் மைதா மாவுக்குள் மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக லாரி டிரைவர் வெங்கடேசன், பாண்டியன், ராமர் மாடசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் இன்னொரு லாரியை நிறுத்தி சோதனையிடப்பட்டது. அதில் 10 சாக்கு மூட்டைகளில் மிளகாய் வற்றல் இருந்தது. அதற்குள் 250 கிலோகஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் (40), மது (30), செங்கோடன் (46), தாமு (20)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X