உலக நாடுகளே உதவுங்கள் .. சந்திரிகா
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண உலக நாடுகள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா திங்கள்கிழமைவேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாக இலங்கை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆரிய ரூபசிங்கே கூறியதாவது:
கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது, பொதுக்கூட்டத்தில் அதிபர் சந்திரிகா பங்கேற்றுப் பேசினார். அப்போது புலிகளின் தற்கொலைப் படையினர்அவரைக் கொலை செய்ய முயன்றனர். ஆனால் சந்திரிகா உயிர்தப்பி விட்டார். அவரது ஒரு கண் பார்வை மட்டும் பறி போனது.
அந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்து ஒரு வருடம்ஆகி விட்டது.
இதற்கிடையே இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நார்வே தூதுக்குழுவினரின் சமரசமுயற்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று சந்திரிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரிசில் நடக்கும் இரண்டு நாட்கள் மாநாட்டில் அதிபர் சந்திரிகா பங்கேற்பார். அப்போது இலங்கைக்கு அதிக அளவு நிதியுதவி அளிக்குமாறு அவர்வேண்டுகோள் விடுப்பார் என்றார் ஆரிய ரூபசிங்கே.