அர்ச்சகர் பள்ளிகள் திறக்கக் கோருகிறார் வீரமணி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோயில்களில் அனைத்து சாதியினரும் பயன்பெரும் வகையில், அர்ச்சகர் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என திராவிடக் கட்சியின் பொதுச் செயலர்வீரமணி பேசினார்.

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திராவிடக் கழகத்தின் பொதுச் செயலர் வீரமணிபேசியதாவது:

தமிழகத்தில் இன்னும் தீண்டாமைக் கொடுமை இருந்து வருகிறது. பல கிராமங்கள் இதிலிருந்து விடுபடவில்லை. இங்கு இரட்டை டம்ளர் முறை அமலில்இருந்து வருகிறது. இதை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்படி தீண்டாமை இல்லையென்றாலும், நடைமுறையில் இருப்பதை தடுக்க வேண்டும். கோவை காந்திபுரத்தில் கடவுள் மறுப்பு கல்வெட்டை யாரோசிலர் அகற்றி விட்டனர். அதே இடத்தில் மீண்டு கல்வெட்டை நிறுவுவோம்.

கோயில்களில் அனைத்துச் சாதியினரும் பணியாற்றும் வகையில் அர்ச்சகர் பள்ளியை மீண்டும் அரசு திறக்க வேண்டும். அவ்வாறு திறக்கப்படாவிட்டால்வரும் டிசம்பர் 29ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், போராட்டம் நடத்துவோம். அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.சாலை மறியலும் நடத்துவோம் என்றார் வீரமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+