ரேடியோ வெங்கடேசன் வழக்கு ஒத்திவைப்பு
கடலூர்:
போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழ்த்தீவிரவாதி ரேடியோ வெங்கடேசன் மீதான வழக்கை அடுத்த மாதம் 29-ம் தேதி வரைகடலூர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தமிழர் விடுதவைப்படை என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் 6.4.91 அன்றுகடலூர் மாவட்டம் புத்தூர் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்தபோலீஸ்காரர் ராஜேந்திரன் என்பவரை வெட்டிக் கொன்று விட்டு, போலீஸ்ஸ்டேஷனில் இருந்த ஆயுதங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக ரேடியோ வெங்கடே.சன், சூ என்கிற சுந்தரம், உள்ளிட்ட 11 மீதுவழக்கு தொடரப்பட்டது. இதில் லெனின் என்பவர் இறந்து விட்டார். மாறன்தலைமறைவாகிவிட்டார் (இவர்தான் வீரப்பனுடன் காட்டில் இருப்பதாகக்கூறப்படுகிறது).
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி திருசிச் சிறையில் உள்ள ரேடியோ வெங்கடேசனும், சூ என்கிற சுந்தரமும் பலத்தபாதுகாப்புடன் கடலூர் மாவட்ட கூடுதல் கோர்ட்டுக்கு அனைத்து வரப்பட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முருகேசனும், ரவி என்பவரும் நீதிமன்றத்தில்ஆஜராகாததால், நீதிபதிஎம். வேலு வழக்கை அடுத்த மாதம் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications