போட்டி புறக்கணிப்பு: தென்கொரிய முடிவு துரதிருஷ்டம் .. ரமேஷ் கிருஷ்ணன்
சென்னை:
தென் கொரியா ஆசிய கோப்பை டென்னிஸ் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என கூறியிருப்பதுதுரதிருஷ்டவசமானது என இந்திய டென்னிஸ் அணி கேப்டன் ரமேஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
தென் கொரிய அணி டெல்லியில் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தோனேஷியாவுடனானபோட்டியில் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா இறுதிப் போட்டியில்விளையாட தகுதி பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ரமேஷ் கிருஷ்ணன் இது துரதிருஷ்டவசமானது என்றார். அவர் கூறுகையில், தென்கொரியாவின் தவறான முடிவிற்கு டெல்லி டென்னிஸ் கழகமும், அனைத்திந்திய டென்னிஸ் கழகமும் எதிர்ப்புதெரிவிக்கலாம். அது குறிதது அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
வரவிருக்கும் டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா- சீனாவுடன் மோதுகிறது. சீனாவின் தலைசிறந்தஆட்டக்காரர் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாட மாட்டார். அதையும் கருத்தில் கொண்டு இந்தியஅணி தயாராகி வருகிறது என்றார்.
யு.என்.ஐ.