For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சண்டைநிறுத்த நீட்டிப்பு....குடியரசு தினத்துக்குப் பிறகு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜம்மு காஷ்மீரில் ஜனவரி 26 ம் தேதி வரை சண்டைநிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதற்குப் பின் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதா வேண்டாமா என்பதுகுறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தெரிவித்தார்.

மத்திய ரிசர்வ் போலீஸார் மத்தியில் அவர் பேசுகையில், தற்போது ரம்ஜான் மாதத்தையொட்டி அறிவித்திருந்த சண்டைநிறுத்தத்தை ஜனவரி 26 ம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த சண்டைநிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க பாகிஸ்தான் முன்வரும் என்றுநினைக்கிறோம்.

முதலில் ஒரு மாத சண்டைநிறுத்தத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் முயற்சி இது.இந்த முறை பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் இந்த சண்டை நிறுத்த அறிவிப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

சமீபத்தில் டெல்லி செங்கோட்டையில் லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். செங்கோட்டையைத் தரைமட்டமாக்கும் முயற்சியில்அவர்கள் இறங்கி விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

இருப்பினும் ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பிரதமர் வாஜ்பாய் திரும்ப திரும்ப கூறிவருகிறார் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X