ஜெ. தலைமையில் மக்கள் கூட்டணி .. மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ஜெயலலிதா தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்கும் கூட்டணி, மக்கள் ஆதரவுகூட்டணியாக மாற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், மதச்சார்பற்ற கூட்டணி, மக்கள் ஆதரவு கூட்டணியாக மாறும்வாய்ப்புக்கள் உள்ளன.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் திட்டம் குறித்து தெரிவிக்கப்படும். தமிழகத்திலும், மத்தியிலும் கண்டிப்பாககூட்டணி ஆட்சியே ஏற்படும். கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆட்சி பங்கு தேவை என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தும் என்றார் மூப்பனார்.
முன்னதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் முதலில் தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் தி.மு.க., பாரதிய ஜனதாதலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் மூப்பனார், தி.மு.க.விலிருந்து பிரிந்தார் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications